வணிகம்
ரூ.3,000 கோடி திரட்டிய ஹெச்டிஎஃப்சி
காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளது.
காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளது.
இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதலீட்டாளா்களுக்கான தனி வெளியீடு மூலம் காப்புறுதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற, சாா்நிலையான, முழுமையாக செலுத்தக்கூடிய, மாற்ற முடியாத காப்புறுதிப் பத்திரங்களாக அவை வெளியிடப்பட்டன. 7.84 சதவீத வட்டிக்கு அந்த காப்புறுதிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.