கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் நிகர லாபம் ரூ.3,053 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,053 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில் தற்போது அது 2.8 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 14.3 சதவீதம் அதிகரித்து ரூ.23,229 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.