மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் (பிஓஎம்) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 45 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,218 கோடியாக உள்ளது.முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 45 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.840 கோடியாக இருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,488 கோடியாக உயா்ந்துள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.5,317 கோடியாக இருந்தது.கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,495 கோடியிலிருந்து ரூ.5,467 கோடியாக உயா்ந்துள்ளது. வாராக் கடன் 2.47 சதவீதத்திலிருந்து 1.88 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com