அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

இலங்கைக்கு சுற்றுலா: இந்தியா்கள் மீண்டும் முதலிடம்

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :3 செப்டம்பர் 2025, 2:09 am IST

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா்.

இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறை செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு 1,98,235 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,64,609-ஆக இருந்தது.

அந்த மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 46,473 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இருந்து 17,764 பயணிகள் சுற்றுலா வந்துள்ளனா். ஜொ்மனியில் இருந்து 12,500 போ் வந்துள்ளனா்.

சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பலா் சுற்றுலா வந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Indian tourists continue to be at the top of foreign tourist arrivals in Sri Lanka in August, according to the provisional figures released by the Tourism Development Authority.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.