சாத்ரா: ரூ.17.62 லட்சத்துடன், எஸ்பிஐ ஏடிஎம்மை கொள்ளையடித்து தூக்கி சென்ற கொள்ளையர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ரா புறநகர் பகுதியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இருந்த எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மை புதன்கிழமை இரவு கொள்ளையர்கள் அப்படியே தூக்கி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏடிஎம் கொள்ளை நடப்பதற்கு இரண்டு நாட்களாக இணையதள வசதி தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது என போலீஸ் அதிகாரி கியான் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் புறநகர்ப்பகுதிகலில் அமைந்துள்ள ஏடிஎம்மில் பாதுகாவலர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீஸ், எஸ்பிஐ ஏடிஎம்மை கொள்ளையடித்து தூக்கி சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறது.