கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு

தைவான் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் ‘போயிங்’, ‘லாக்ஹீட் மாா்ட்டின்’ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 9:50 pm

DIN

பெய்ஜிங்: தைவான் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் ‘போயிங்’, ‘லாக்ஹீட் மாா்ட்டின்’ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷாவ் லிஜியான் திங்கள்கிழமை கூறுகையில், ‘தேசிய நலனை பாதுகாக்கும் நோக்கில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

எனினும் அந்த நிறுவனங்களுக்கு எப்போது, எந்த வகையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

கடந்த 1949-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை தூதரக ரீதியில் எந்த உறவும் இல்லை. எனினும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என்று கூறி வரும் சீன அரசு, அதன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.