பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

புது சர்க்காரின் கடமைகள்

கடைசியில் பூரண ஸ்வராஜ்யத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது என்று மகாத்மா காந்தி இன்று மாலை பிரார்த்தனை கூட்டத்தில் கூறினார்.

News image
Updated On :28 ஜூலை 2025, 9:58 am IST

கடைசியில் பூரண ஸ்வராஜ்யத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது என்று மகாத்மா காந்தி இன்று மாலை பிரார்த்தனை கூட்டத்தில் கூறினார்.
காந்திஜி கூறியதாவது:    
இன்னும் பூரண சுதந்திரம் வந்தாகவில்லை. நமது முடிசூடா மன்னர் ஜவாஹர்லால் நேருவும் இடைக்கால சர்க்காரில் பதவியேற்றிருக்கும் அவரது சகாக்களும் ஜனங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் உண்மையான சேவையை செய்வார்களானால் பூரண சுதந்திரம் வந்து விடும்.
தண்டி யாத்திரை உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த உன்னதமான போராட்டத்தில் இந்தியப் பெண்கள் முன்பு எந்த சமயத்திலும் இல்லாத அளவுக்கு விழிப்படைந்துவிட்டார்கள். அந்த நாளில் அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் கண்டேன். கஷ்டப்படும் பாமர மக்களுக்கு சுதந்திரம் பெறுவது என்று காங்கிரஸ் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையின் சின்னமே அந்த யாத்திரை. வரியில்லாமல் உப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே  அப்போது எழுப்பிய பிரச்னை. எனவே உப்பு வரியை அறவே நீக்குவது புது சர்க்காரின் முதல் வேலைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.
உப்பு வரியை ரத்து செய்வது மாதிரி வகுப்பு செüஜன்யத்தை ஒரு கணத்தில் ஏற்படுத்திவிட முடியாது. மந்திரிகள் அதற்காக உயிர் வாழ வேண்டும்.அதற்காக உயிரையும் அர்ப்பணம் செய்யத் தயங்கக்கூடாது. தீண்டாமையை அடியோடு அகற்றவும் கதரைப் பரப்பவும் காங்கிரஸ் தலைவர்கள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறார்கள். எனது பங்கி சகாக்கள் படும் அவதியைப் போக்கவேண்டும் என்பதற்காக நான், பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதி என்ற முறையில் வைசிராயிடம் போக வேண்டியிருந்தது. சமூகத்திலிருந்து இந்த மாசை அகற்றும்படி இனி நான் இடைக்கால சர்க்காரைக் கேட்டுக்கொள்ளவேண்டும். பங்கிகள் வசிக்கும் சேரிகளை அவர்கள் பார்க்கட்டும்.


தினமணி (03-09-1946)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.