பாசனம் பலவகை
நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பருவமழை குறைவு; மழை நீரை நிலத்துக்கு அடியில் கொண்டு சேர்க்கும் மரங்கள் அழிப்பு, காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து வளரும் தன்மை கொண்ட தைல மரங்கள், சீமைக் கருவேல மரங்கள் பெருக்கம்; நிலத்தடி நீரை பெருமளவு வெளியேறும்படி அமைந்த ஆழ்குழாய்க் கிணறுகளின் பெருக்கம்; பசுமைத் தாவரங்களின் பரப்புக் குறைவினால் வளிமண்டலத்தில் கார்பன் அளவு மிகுந்து புறவெளி வெப்பமயமாதல்; கிராமங்கள் நகரங்கள் தோறும் ஆழம் இல்லாத குளங்கள் ஏரிகள்; ஆறுகளில் தேவையான தடுப்பணைகள் இல்லாதது போன்றவை நாட்டின் நீர் வளம் குறையக் காரணங்கள்.









