உடல் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ள இயற்கை எப்போதும் உதவிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அவசரப்பட்டு, இயற்கையை மீறி, செயற்கைப் பொருள்களைத் திணித்து, உடலின் இயற்கைத் தன்மையை மாற்றி விடுகிறோம். இயற்கையின் முழு ரகசியங்களைப் புரிந்து கொள்ள முடியாத நாம், இயற்கையை மதித்து, இயற்கையோடு ஒன்றி வாழும்போது, இயல்பாக நமது ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மீறும்போது மட்டுமே இன்னல்கள் நோயாக நம்மைத் தாக்குகிறது. உணவுதானே, இதில் ஏன் கட்டுப்பாடு என்று அலட்சியமாக இருப்பதை விட்டுவிட்டு, உணவே நம் ஆரோக்கியத்தைக் காக்கிறது என்ற கவனத்துடன் இனி உணவைப் பார்ப்போம். உணவுக் கட்டுப்பாட்டை சுமையாக எண்ணாமல், சுகமாக எண்ணினால், ஆரோக்கியம் என்னும் அற்புதக் கவசம் நம்மை எந்நாளும் பாதுகாக்கும்.