ஜவ்வரிசி வற்றல்

செய்முறை: ஜவ்வரிசியை தண்ணீரில் இரவு முழுதும் ஊற விடவும். மறுநாள் காலையில், பச்சை மிளகாய்,
ஜவ்வரிசி வற்றல்
Updated on
1 min read

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கிண்ணம்

தண்ணீர் - 6 கிண்ணம்

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1 தேவைக்கேற்ப

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை: ஜவ்வரிசியை தண்ணீரில் இரவு முழுதும் ஊற விடவும். மறுநாள் காலையில், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் 6 கிண்ணம் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுது, ஊற வைத்துள்ள ஜவ்வரிசி (தண்ணீரை வடித்து விட்டு), எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். ஜவ்வரிசி வெந்து, மினுமினுப்பாக மாறும். கெட்டியாக வந்ததும் இறக்கிவிடவும், மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெந்நீரை ஊற்றிக் கிளறவும். நீர்க்க இருந்தால், சிறிது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கிளறினால் கெட்டியாகி விடும். உப்பு சரிபார்த்து, கூழும் பதமாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். பிறகு மேலே சொன்னவாறு பிளாஸ்டிக் பேப்பரில் ஊற்றி காயவிடவும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com