

தேவையானவை:
சிறிய சுரைக்காய் - 1
பச்சை மிளகாய் -2
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் துண்டுகள் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய்களைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங்காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி சுரைக்காய், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.