

தேவையானவை:
சின்ன வெங்காயம் - கால் கிண்ணம்
வெந்தயக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து,பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 1தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
குழம்பு பொடி - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடியைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.