

தேவையான பொருட்கள்:
சுறா மீன் - 250 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 14 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பெரிய பூண்டு - 2 ( பூண்டு நிறைய இருக்க வேண்டும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை: சுறா மீனை அலசிவிட்டு 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கிவிடலாம். பின்னர், நீரை வடிகட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பின் பூண்டு பல்களைப் சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி.
****
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.