

தேவையானவை: அரிசி - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, தோலுரித்த பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் தேக்கரண்டி, புதினா - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில், எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கிவிட்டு பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.