தேங்காய் உப்பு சீடை

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில்  பிசைந்து கொள்ளவும்.
தேங்காய் உப்பு சீடை
Updated on
1 min read

தேவையானவை:
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுத்த மாவு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ
பொடித்த தேங்காய் - கால் கிண்ணம்

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில்  பிசைந்து கொள்ளவும்.

பின்னர், சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய்யை காய வைத்து, நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.  

தேங்காய் உப்பு சீடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com