.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தக தகவென மின்னும் வண்ணப் பொன்மேனியில் எலும்புகள் இருக்கின்றனவா என்று சந்தேகம். ஏனெனில் உடம்பை எப்படி எப்படியெல்லாமோ வளைத்து ஆனந்த, அற்புத நடனம் அல்லவா ஆடுகிறார் ஜெயமாலினி?
இவர் இல்லாத-அதாவது ஜிகுஜிகு நடனமாடாத தெலுங்குப் படங்கள் இல்லை. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் இவரது நடனம் இடம்பெற்றுத்தான் இருக்கும்.
டைரக்டர் விட்டலாச்சாரியாவின் மந்திர, தந்திரப் படம் என்றால் ஜெயமாலினி தான் கதாநாயகி.
அவருக்கு அப்படி ஒரு ராசி.
‘அழகு இருக்கும் வரை ஆடு. ஆடமுடிந்த வரை ஆடு’ என்று எவரோ இவரிடம் உபதேசித்து இருக்கிறார். அதனால் ஜெயமாலினியின் சதங்கை ஒலி ஜல்ஜல்லென்று பல படங்களில் குலுங்கி ஜெயகோஷம் போட்டு வருகிறது.
இந்த இடத்தைப் பிடிக்க அகில இந்தியாவில் இன்னொரு ஆடும் அழகியால் இதுவரை ஏனோ முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.