

கேள்வி – அம்மா துணை இல்லாமல் எந்த நடிகையாவது முன்னேறி இருக்கிறாரா?
பதில் – ஓ…முன்னேறி வருகிறாரே, சுபாஷிணி. இப்போது படப்பிடிப்புக்கு அவருக்கு துணை பாட்டி.
***
கேள்வி – தமிழ்ப்பட உலகில் வில்லனைக் கதாநாயகன் பழிக்குப் பழி வாங்கும் படலம் எப்போது இல்லாமல் போகும்?
பதில் –– கதாநாயகன் இல்லாமல் ஒரு தமிழ்ப்படம் தயாரானால்!
***
கேள்வி – ஜெய் பழகுவதற்கு எப்படிப்பட்டவர்?
பதில் – முன்பு தங்கக் கம்பி. இப்போதும் அப்படித்தான். கால மாறுபாட்டினால் ‘காரட் வித்யாசம்’ கொஞ்சம் கூட ஏற்படவில்லை.
*****
திருமணம் தேவையா?
திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஒரு வகையில் பார்த்தால் அதை ஆரம்பம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் நிச்சயமாக அது முடிவல்ல. – கமலஹாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.