

கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்ஷன் என்கிற கடலில் நீந்தித் திரியும் மீன்களுக்கிடையே பிரமாண்டமான சுறா மீனாக விளங்குகிறார் கமலஹாசன்.
கமலஹாசன் அண்டு கமலஹாசன் என்று டைட்டில் கார்டிலேயே வித்தியாசப் படுத்தி இருப்பதற்கேற்ப இரட்டை வேடங்களையும் ஒன்றுக்கொன்று ஸ்நானப் பிராப்திகூட இல்லாமல் செய்திருக்கிறார் கமல். ஆனால் நினைவில் நிற்பதோ அப்பாதான். ‘அந்தக் கேரக்ட்ரை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே!’ என்று யோசித்து, மண்டைக் குடைச்சல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஐடெண்டிஃபிகேஷன் கிடைக்கிறது.
அப்பழுக்கற்ற நடிப்பால், பார்ப்பவர் மனத்தைக் கவர்ந்தாலும் சுஜாதா, கமலுடன் இணைய அவரது தோற்றம் அனுமதிக்கவில்லையே?
அம்பாகப் பாய்ந்து, அழகாக நடனம் ஆடுகிறார் அம்பிகா.
இயற்கையிலேயே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வப்னா, பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பதில் வியப்பில்லை.
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கின்ற கேரக்டர் சுகுமாரிக்கு. அற்புதமாகச் செய்திருக்கிறார்.
புத்துயிர் பெற்றிருக்கிறார் நாகேஷ்.
வித்தியாசமான வில்லன் சங்கிலி முருகன்.
கண நேரமே தோன்றினாலும் கண்ணெதிரிலேயே நிற்கிறார் கண்ணன்.
பஞ்சு அருணாசலம், ஜி.என்.ரங்கராஜன், என்.கே.விசுவநாதன், இளையராஜா யூனிட்டின் படம், என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மொத்தத்தில் கருவாடு.
-திரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.