

ஒரு தெலுங்குப் படத்தில் மணவறைக் காட்சி. கவிதா உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் மணமகன் யார் தெரியுமா? ஒரு நல்ல பாம்பு! அழகாகத் தலையை உயர்த்தி படமெடுத்து மந்திரங்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தது! சுற்றியிருந்த கூட்டத்தைப் பார்த்து பயந்து ஒரு ஷாட்டில் தலையை அப்படியே பின்னுக்குச் சாய்த்துக் கொண்டது பாம்பு. ‘என்னப்பா இது ஜெயமாலினி மாதிரி காபரே ஆடுது?’ என்று டைரக்டர் சொல்ல, செட்டிலிருந்த எல்லோரும் ஜெயமாலினி உள்படச் சிரித்தார்கள்.
-பை-அனந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.