ரஜினி உட்கார்ந்த நாற்காலி

சிறந்த கலைஞர்கள் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசினால் வழங்கும் பரிசளிப்பு விழா கலைவாணர்
Updated on
1 min read

சிறந்த கலைஞர்கள் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசினால் வழங்கும் பரிசளிப்பு விழா கலைவாணர் அரங்கில் கவர்னரின் ஆலோசகர் திரு.டி.என்.லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற போது –

ஸ்ரீகாந்த், லட்சுமி, ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பேபி சுதா, டைரக்டர் துரை, ஜெயகாந்தன் (வரவில்லை), கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், ஒளிப்பதிவாளர்கள் திவாரி, நல்லுசாமி, பின்னணிப் பாடகர்கள் வாணி ஜெயராம், மலேஷியா வாசுதேவன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பரிசு பெற்றனர்.

கவர்னரின் ஆலோசகர் தமது தலைமையுரையில், ‘இப்போது தரமான படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதென்றும், இது தொடர்ந்து நீடிக்க வேண்டு’மென்றும் குறிப்பிட்டார்.

கவர்னர் பட்வாரி பேசுகையில், கால மாற்றத்தையும் மக்களின் ரசிகத் தன்மையையும் கருத்திற்கொண்டு சிறந்த படங்களைத் தயாரிக்கக் கேட்டுக் கொண்டார்.

டைரக்டர் புல்லையா, தமிழ்ப்படவுலகில் தான் போட்ட அஸ்திவாரத்தை இன்று வரை சிவாஜி கணேசன் காப்பாற்றி வருகிறார் என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க சார்பில் கலந்து கொண்ட சிவாஜி கணேசன் சொன்னார் : இதுவரை இது போன்ற பட விழாக்களுக்கு என்னை அழைத்ததில்லை! தமிழ்ப் படவுலகை இளங்கலைஞர்கள் சிறப்பாக்குவார்கள் என்று நம்புகிறேன்.’

கவர்னரின் காலில் விழுந்து ஆசிபெற்றார் லட்சுமி.

ரஜினிகாந்த், அவருக்காக பின்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்காராமல் முன் வரிசையில் லட்சுமிக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையில் இருந்த நாற்காலியில் போய் ‘லொடுக்’கென்று உட்கார்ந்து கொண்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com