

வடிவுக்கரசி வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நான்கைந்து இளைஞர்கள் அவருடன் தீவிரமாகத் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.
மதுரையில் வடிவுக்கரசியின் பெயரில் இருக்கும் ஒரு மன்றத்தின் தலைவர் சலீம், செயலாளர் ரவி, பொருளாளர் காசி மற்றும் எஸ்.எஸ்.பி.ராஜன், எம்.மீனாட்சி சுந்தரம் ஆகியோரே அவர்கள்.
‘கலை இளவரசி வடிவுக்கரசி தலைமை மன்றம்’ எனத் தங்கள் மன்றத்தை அவர் அங்கீகரித்துக் கையெழுத்திட வேண்டும் என்று வடிவுக்கரசியை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
‘இதோ பாருங்கள், நான் நடித்து இப்போதுதான் ஆறு படங்கள் வெளியாகியிருக்கின்றன. நான் என்ன சாதித்துவிட்டேன் என்று ‘கலை இளவரசி’ என்று ஒரு பட்டத்தைத் தூக்கிக் கொடுக்கிறீர்கள்? ஒரு நடிகையின் உண்மையான வளர்ச்சிக்கு இந்த மன்றங்களும், இப்படிப்பட்ட பட்டங்களும் உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கலை உலகில் முதல் படிக்கட்டில் இப்போதுதான் நான் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவோ! இப்படிப்பட்ட ஒரு பட்டத்துக்கு தகுதியானவள் என்று நான் என்று நினைக்கிறேனோ அந்த அளவுக்கு உயருகிறேனோ, அப்போது உங்களை நான் அழைத்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுகிறேன். இப்போது என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் வடிவுக்கரசி.
இந்தக் காலத்தில் பட்டம் வேண்டாம் என்கிறாரே, ஒரு சினிமா நடிகை. நம்பத்தான் முடியவில்லை!
-ரமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.