பறந்து விடுவாரோ பம்பாய்க்கு?

கல்லுக்குள் ஈரம் படம் வெளியான பிறகு சிறிது காலத்திற்குப் பரபரப்பாகத் தேடப்பட்டவர். அந்த நேரத்தில்
பறந்து விடுவாரோ பம்பாய்க்கு?
Updated on
1 min read

கல்லுக்குள் ஈரம் படம் வெளியான பிறகு சிறிது காலத்திற்குப் பரபரப்பாகத் தேடப்பட்டவர். அந்த நேரத்தில் இவரும் தமிழ்ப் பட உலகமும் ஓடிப் பிடித்து விளையாடியதாகக் கூடக் குறிப்பிடலாம்.

ஹைதராபத்திலிருந்து அதை நம்பிச் சென்னைக்கு வந்து குடியேறிய பிறகு ஏனோ தெரியவில்லை, இவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. தற்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகரந்தம் உட்பட நான்கு தமிழ்ப் படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் அருணாவினால் மறக்க முடியாதது கே.பாலசந்த்ரின் பாராட்டு.

‘அவர் என்னை டெலிபோனில் அழைத்து பாராட்டிய போது எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கை, கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டன. ரொம்ப தாங்க்ஸ் சார் என்ற வார்த்தையைக் கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் வெளிவந்தன’. என்கிறார் அகன்ற விழிகள் கொண்ட அருணா.

இந்தி இவருக்கு நன்றாகத் தெரியும். பறந்து விடுவாரோ பம்பாய்க்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com