களக்காட்டில்  நாய்த் தொல்லை!

Updated on
1 min read



 களக்காடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. பகல், இரவில் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்களால் அனைத்துத் தரப்பினருமே அச்சத்துக்கும், அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.
 இரவில் மின்தடை நேரத்தில் தெருக்களில் செல்வோரை நாய்கள் விரட்டிச் செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com