சாலையில் பள்ளம்...

குரோம்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய ஸ்டேஷன் பார்டர் சாலையில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
சாலையில் பள்ளம்...
Published on
Updated on
1 min read

குரோம்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய ஸ்டேஷன் பார்டர் சாலையில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாக்கடைத் திட்டத்துக்காக குழாய்களைப் பதிக்கும் நேரத்தில் தெற்கு ரயில் நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வேயின் மின் கம்பிகள் இந்தச் சாலையின் கீழ் செல்வதால் திட்டத்துக்கு ரயில்வே எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

ரயில்வே நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் திட்டத்தை முடிக்க முடியாது என்று நகராட்சி நிர்வாகத்தார் தெரிவிக்கின்றனர். இதனால் 3 வார காலமாக இப்பணி முடியாமல் உள்ளது. இந்தச் சாலையைப் பயன்படுத்தும் மக்கள் இதனால் அவதிப்படுகின்றனர்.

தெற்கு ரயில்வே நிர்வாகம், நகராட்சியுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முடிக்க ஒத்துழைக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com