கோடம்பாக்கம் மைனர் டிரஸ்ட்புரம் பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையோர வாய்க்காலை சீரமைப்பதாகக் கூறி இந்தப் பூங்காவை பாழாக்கி விட்டனர். இன்று மாநகரப் பகுதிகளில் பூங்காக்கள் இருந்தாலும் சிறுவர்களுக்கான பூங்கா ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. எனவே, இந்தப் பூங்காவைப் புனரமைத்து மீண்டும் நல்ல முறையில் இயக்க பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ச.பரமேஸ்வரன், டிரஸ்ட்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.