பதச் சேதம் | சொற் பொருள் |
| தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை | அரை: இடுப்பு; சிவந்த துணி: காவித் துணி; |
| சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு | சதிரொடு: பெருமையோடு; விரகொடு: சாமர்த்தியத்தோடு; ஒரு சத்தத்து அறிந்து: ஒலிக்கின்ற குறிப்பை மட்டுமே அறிந்து; |
| கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே | கரண வலைக்குள்: புலன்களின் வலைக்குள்; நிலைக்கைக்கு: நிலைமைக்கு; |
| கனக(ம்) இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே | கனகம்: பொன்; இயற்றி: ரசவாதத்தால் செய்து; எனை சற்று அறிந்து: என்னைச் சற்றே கவனித்து; |
| அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை | கொக்கு: மாமரம்; அரிந்து: வெட்டி; அரு வரையை: அரிதான கிரெளஞ்ச மலையை; பொட்டு எறிந்து: தூளடித்து; உயர் ஆனை: பெருமை வாய்ந்த தேவசேனை அம்மைக்கு; |
| அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே | அருணகிரி புக்கு: திருவண்ணாமலையில் புகுந்து; |
| மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் | மலையை வளைத்து: மேரு மலையை வில்லாக வளைத்து; பறந்து மருவு புரத்தை: பறக்கும் சக்தியுள்ள திரிபுரங்களை; சிவந்து: கோபித்து; வறிது: சிறிதே; நகைத்திட்டு: சிரித்த; |
| மதலை புனத்தில் புகுந்து நர வடிவு உற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே. | புனம்: தினைப் புனம்; நரவடிவுற்று: மனித வடிவம் கொண்டு; மற மயிலை: வேடர் குலத்துப் பெண்ணை; சுற்றிவந்த: கவர்ந்து வந்த; |
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254768648&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து</strong>... தலையை மொட்டையடித்துக் கொண்டும்; காவித் துணியை இடுப்பில் தரித்துக் கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை</strong> ... சடையை வளர்த்துக் கொண்டும்; புலித்தோல் ஆடையை,</p><p align="JUSTIFY"><strong>சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து</strong> ... பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்து கொண்டும்; சாமர்த்தியமாக புதியபுதிய கலைகளைக் கற்கத் தொடங்கியும்;</p><p align="JUSTIFY"><strong>தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு அணிந்து</strong> ... தவம் என்ற சொல்லை உச்சரிப்பதைத் தவிர அதன் பொருளை உணராமல், உடல் முழுக்கத் திருநீற்றைப் பூசிக்கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>கரண வலைக்குள் புகுந்து</strong> ... புலன்கள் விரித்திருக்கும் வலைக்குள் தெரிந்தே புகுந்து அகப்பட்டுக் கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே</strong> ...கதறி துக்கப்படும் நிலைக்கு ஆட்பட்ட லட்சணத்தில்;</p><p align="JUSTIFY"><strong>கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து</strong> ... ரசவாதத்தால் பொன்னைச் செய்து அலைந்து சோர்ந்துகிடக்கும் என்னையும் சற்றே கவனித்து;</p><p align="JUSTIFY"><strong>கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே</strong> ... என் கவலைகளை அழிப்பதற்காக எனக்கு இரக்கப்பட்டு அருளவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>அலை கடலில் கொக்கு அரிந்தும்</strong> ... அலைவீசும் கடலிலே மாமரமாக நின்ற சூரபதுமனைப் பிளந்தும்;</p><p align="JUSTIFY"><strong>அரு வரையைப் பொட்டு எறிந்தும்</strong> ... அரிய கிரெளஞ்ச மலையைத் தூளடித்தும்;</p><p align="JUSTIFY"><strong>அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை</strong> ... தேவலோகத்தில்புகுந்தும்; பெருமை நிறைந்த தேவானையம்மையைக்கு,</p><p align="JUSTIFY"><strong>அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும்</strong> ... அருள்புரிந்து, கைப்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருந்தும்;</p><p align="JUSTIFY"><strong>அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே</strong> ... ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!</p><p align="JUSTIFY"><strong>மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து</strong> ... மேருமலையை வில்லாக வளைத்து; பறக்கும் சக்தியுடைய திரிபுரங்களைச் சினந்து;</p><p align="JUSTIFY"><strong>வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை</strong> ... சிறிய புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனே!</p><p align="JUSTIFY"><strong>புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து</strong> ... தினைப்புனத்துக்குள் நுழைந்து, அங்கே மனிதவேடம் தரித்து, வள்ளியின்மேல் காதலாகித் திரிந்து,</p><p align="JUSTIFY"><strong>மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே.</strong> ... வேடர்குலத்து மயிலான அவளை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே!</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><em>சுருக்க உரை</em></p><p align="JUSTIFY"><em>அலைவீசுகின்ற கடலில் மாமரமாக நின்ற சூரபதுமனைச் சாய்த்தவனே! கிரெளஞ்ச மலையைத் தூளடித்தவனே! தேவலோகத்தில் புகுந்து, தேவானையம்மைக்கு அருள்புரிந்து அவளைக் கரம்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருப்பவனே! ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!</em></p><p align="JUSTIFY"><em>தலையை மொட்டையடித்துக்கொண்டும்; காவியாடையைத் தரித்துக் கொண்டும்; சடையை வளர்த்துக்கொண்டும்; புலித்தோல் ஆடையைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்துகொண்டும்; எதையெதையோ கற்க முயன்றுகொண்டும்; தவம் என்பதன் பொருளறியாமல் வெறும் ஒலிக்குறிப்பாக மட்டுமே அறிந்துகொண்டும்; உடல்முழுதும் திருநீற்றைப் பூசிக்கொண்டும்; தெரிந்தே புலன்கள் விரித்த வலைக்குள் விழுந்து வேதனை அடைகின்றவனும்; இரசவாதத்தால் பொன்னை உண்டாக்கிக்கொண்டு திரிகின்றவனுமாகிய என்மீது சற்றே இரக்கம்கொண்டு என் கவலைகளை நீக்கி என்னை ஆட்கொண்டு அருள்வாயாக.</em></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

