ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/


‘என்னை ஆண்டருள்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருச்செந்திலுக்கானது. 

ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு நெடில் என்று இரண்டு இரண்டு எழுத்துகளால் அமைந்துள்ள ஆறு சீர்களையும் ஒரு தொங்கல் சீரையும் கொண்ட பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டிருக்கிறது.  திரும்பத் திரும்பச் சுழன்று பயிலும் மெல்லொற்று இனிமையான சந்தத்தைத் தருகிறது.


தந்தா னந்தா தந்தா னந்தா
                தந்தா னந்தா தனதான

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
               மென்பா கஞ்சொற் குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்
               மென்றோ ளொன்றப் பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
               வன்பே துன்பப் படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
                வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
                குன்றாள் கொங்கைக் கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
                ரும்போய் மங்கப் பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
                கன்றே வும்பர்க் கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
                கந்தார் செந்திற் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.