ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 798

என் வறுமை நீங்குமாறு....

News image
Updated On :13 ஏப்ரல் 2018, 5:06 am

‘என் வறுமை நீங்குமாறு மயில்மீதிலேறி வரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 27 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற்சீரில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும் பயில்கின்றன.

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

      தத்தனத் தத்ததன                   தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு 

         சத்துவிட் டப்படிபொ              லடியேனுஞ் 

      சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி 

         சத்துவத் தைப்பிரய              விடும்வேளை 

சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு 

         தொக்குசற் றுக்கடையன்         மிடிதீரத் 

      துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி 

         சுற்றவிட் டுக்கடுகி               வரவேணும் 

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய 

         வெற்றிசத் திக்கரக               முருகோனே 

      வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல 

         விட்டபச் சைச்சரண              மயில்வீரா    

கத்தர் நெட்டுச் சடையர் முக்கணக் கக்கடவுள் 

         கச்சியப் பர்க்கருள்செய்           குருநாதா

      கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் 

         கற்பினுக் குற்றுபுணர்             பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.