ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 786 

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ 

News image
Updated On :19 மார்ச் 2018, 7:29 am

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனனா தனனத் தனனா தனனத்

      தனனா தனனத்                     தனதான


அருமா மதனைப் பிரியா தசரக்

         கயலார் நயனக்                  கொடியார்தம்

        அழகார் புளகப் புழுகார் சயிலத்

         தணையா வலிகெட்              டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்

         றிளையா வுளமுக்               குயிர்சோர

        எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

         கிருபா தமெனக்                  கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்

         டுரமோ டெறிபொற்              கதிர்வேலா

         உறைமா னடவிக் குறமா மகளுக்

         குருகா றிருபொற்                புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற்

         றெரியா வரனுக்                 கரியோனே

         செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்

         றிருவீ தியினிற்                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.