ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 788

அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்

News image
Updated On :23 மார்ச் 2018, 5:27 am


‘அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

 அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெட்டெழுத்தும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனதனா தானனத் தனதனா தானனத்

      தனதனா தானனத்                  தனதான


அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்

         கவசமா யாதரக்                  கடலூடுற்

      றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்

         கறியொணா மோனமுத்          திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்

         பெரியஆ தேசபுற்                 புதமாய

      பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்

         பெறுவதோ நானினிப்             புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்

         படியுமா றாயினத்                தனசாரம்

      பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்

         பரமமா யூரவித்                  தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்

         பொடிபடா வோடமுத்            தெறிமீனப்

      புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்

         பொருதவே லாயுதப்              பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.