ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 790

உனது திருவடிகளைத் தந்தருளவேண்டும்

News image
Updated On :24 மார்ச் 2018, 11:01 am

‘உனது திருவடிகளைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையுள்ள எல்லாச் சீர்களும் ஒரு நெடில், மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என நான்கு-நான்கு எழுத்துகளைக் கொண்டவை.

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்

      தானதனத் தானதனத்               தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்

         டாடைமறைத் தாடுமலர்க்        குழலார்கள்

      ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்

         டாரையுமெத்  தாகமயக்          கிடுமோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்

         தூதுவிடத் தேபொருளைப்        பறிமாதர்

      தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்

         சோதியொளிப் பாதமளித்         தருள்வாயே

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்

         சாயகடற் சூரைவதைத்           திடுவோனே

      தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்

         தாபரம்வைத் தாடுபவர்க்         கொருசேயே

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்

         தேயுருகிச் சேருமணிக்           கதிர்வேலா

      சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்

         தேவமகட் கோர்கருணைப்        பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.