பகுதி - 932

‘காலன் எனை அணுகாமல்..
பகுதி - 932
Published on
Updated on
1 min read

 

‘காலன் எனை அணுகாமல் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வடவேங்கடத்துக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாந்தன தானதன தாந்தன தானதன

      தாந்தன தானதன                   தனதான

 

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில

         மூண்டவி யாதசம               யவிரோத

      சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்

         தாந்துணை யாவரென            மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு

         தோய்ந்துரு காவறிவு             தடுமாறி

      ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்

         யான்தனி போய்விடுவ           தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்

         காந்தவி சாகசர                  வணவேளே

      காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி

         யாண்டகை யேயிபமின்          மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட

         வேங்கட மாமலையி             லுறைவோனே

      வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

         வேண்டவெ றாதுதவு             பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com