திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பகுதி - 932

‘காலன் எனை அணுகாமல்..

News image
Updated On :31 அக்டோபர் 2018, 11:54 am IST

 

‘காலன் எனை அணுகாமல் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வடவேங்கடத்துக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாந்தன தானதன தாந்தன தானதன

      தாந்தன தானதன                   தனதான

 

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில

         மூண்டவி யாதசம               யவிரோத

      சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்

         தாந்துணை யாவரென            மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு

         தோய்ந்துரு காவறிவு             தடுமாறி

      ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்

         யான்தனி போய்விடுவ           தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்

         காந்தவி சாகசர                  வணவேளே

      காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி

         யாண்டகை யேயிபமின்          மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட

         வேங்கட மாமலையி             லுறைவோனே

      வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

         வேண்டவெ றாதுதவு             பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.