04.02.1746: இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!

வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
04.02.1746: இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
Updated on
1 min read

வீரமா முனிவர் நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709ஆம் ஆண்டு இயேசுசபை குருவானார் . பின்னர் சமயப்பணிக்காக 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இவர் பெப்ரவரி 4, 1746 அன்று மரணம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com