TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 24

திருவாசகத்தை சிறப்பிக்க, "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்னும் தொடர் வழங்கலாயிற்று.
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 24
Published on
Updated on
5 min read

பத்தாம் வகுப்பு

கடவுள் வாழ்த்து

"மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்

கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே"

- மாணிக்கவாசகர்

சொற்பொருள்:

* மெய் - உடல்

* விதிவிதிர்த்து - உடல் சிலிர்த்து

* விரை - மணம்

* நெகிழ - தளர

* ததும்பி - பெருகி

* கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்

* சயசய - வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு:

* விடேன் -  தன்மை ஒருமை வினைமுற்று

ஆசிரியர் குறிப்பு:

* சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.

* திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.

* இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.

* திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.

* இவரை "அலுத்து அடியடைந்த அன்பர்" என்பர்.

* திருவாசகமும் திருகொவையாரும் இவர் அருளியவை.

* இவர் எழுப்பிய கோவில், தற்போது "ஆவுடையார் கோவில்" என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.

நூல் குறிப்பு:
* சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.

* திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.

* திருவாசகத்தை சிறப்பிக்க, "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்னும் தொடர் வழங்கலாயிற்று.

* திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

* சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

ஜி.யு.போப்:
உலக வரலாற்றிலேய் மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை" என்கிறார் ஜி,யு.போப்.

திருக்குறள்

சொற்பொருள்

* விழுப்பம் - சிறப்பு

* ஓம்பப்படும்  - காத்தல் வேண்டும்

* பரிந்து - விரும்பி

* தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்

* குடிமை - உயர்குடி

* இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்

* அழுக்காறு - பொறாமை

* ஆகம் - செல்வம்

* ஏதம் - குற்றம்

* எய்துவர் - அடைவர்

* இடும்பை - துன்பம்

* வித்து - விதை

* ஒல்லாவே - இயலாவே

* ஓட்ட - பொருந்த

* ஒழுகல் - நடத்தல்

* கூகை - கோட்டான்

* இகல் - பகை

* திரு - செல்வம்

* தீராமை - நீங்காமை

* பொருதகர் - ஆட்டுக்கடா

* சேருவர் - பகைவர்

* சுமக்க - பனக

* கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)

* எய்தற்கு - கிடைத்தற்கு

* கூம்பும் - வாய்ப்பற்ற

இலக்கணக்குறிப்பு

* ஒழுக்கம் - தொழிற்பெயர்

* காக்க - வியங்கோள் வினைமுற்று

* பரிந்து, தெரிந்து - வினையெச்சம்

* இழிந்த பிறப்பு - பெயரெச்சம்

* கொளல் - அல் ஈற்றுத் தொழிற்பெயர்

* உடையான் - வினையாலணையும் பெயர்

* உரவோர் - வினையாலணையும் பெயர்

* எய்தாப் பழி - ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* நல்லொழுக்கம் - பண்புத்தொகை

* சொலல் - தொழிற்பெயர்

* அருவினை - பண்புத்தொகை

* அறிந்து - வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

* திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்

* தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவல் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.

* பிறப்பொக்கும் எல்லா உயிரிக்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.

* இவரின் காலம் கி.மு.31 ஆம் நூற்றாண்டு என்பர்.

* தமிழக அரசு தைத்திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.

நூல் குறிப்பு:

* திரு + குறள் = திருக்குறள்

* உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

* இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.

* "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம்" என்றும், "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்றும் பாவேந்தர் போற்றுகின்றார்.

* மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

ஏலாதி

- கணிமேதாவியார்

* வணங்கி - பணிந்து

* மாண்டார் - மாண்புடைய சான்றோர்

* நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்

* நோக்கி - ஆராய்ந்து

* நூல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத்தொகை

* பலியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம

பிரித்தறிதல்:

* வழியொழுகி = வழி + ஒழுகி

* ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.

* இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.

* காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு.

* இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

* இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

* ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.

உரைநடை: உயர்தனிச் செம்மொழி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்:

"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள்முதல் உயரிமொழி"

என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்:

* "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

பாவாணர் கூற்று:

* தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஓண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி என்பார் பாவாணர்.

முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:
தொன்மை, பிறமொழித் தாக்கமின்னை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.

தொன்மை:
* முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.

* உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து "என்றுமுள தென்தமிழ்" என்பார் கம்பர்.

பிறமொழித் தாக்கமின்மை:

* பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.

* அதனால், தமிழ் ஒன்றோ பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

தாய்மை:

* தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.

* தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.

* 1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.

தனித்தன்மை:

* இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.

* தமிழர் அகம், புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.

* திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:

* உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.

* இவற்றின் மொத்த அடிகள் = 26350

* அக்காலத்தே இவ்வளவிற்கு "விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை" என்பது உலக இயக்கியங்களை ஆய்ந்த "கமில்கவலபில்" என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிவு.

* மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றனர்.

* சங்க இலக்கியங்கள் "மக்கள் இலக்கியங்கள்" எனப்படும்.

* தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்கச் சவிருப்பதை உண்டாக்குவது" என்பார் கெல்லட்.

* நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.

* தொல்காப்பியம் மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் அகத்தியர் ஐந்து இலக்கணங்களை கூறியுள்ளார்.

பொதுமைப் பண்பு

* தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.

* செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.

நடுவுநிலைமை:

* சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை

* இயற்கையோடு இணைந்தவை.

* மக்கள் சிற்ப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.

பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:

* சங்கப்படைப்புகள், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை" முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்துகிறது.

உயர் சிந்தனை:

* யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.

* "பிறப்பொக்கும் எல்லா உயிரிக்கும்" எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:

* தமிழ்ச்சான்றோர் மொழியை, "இயல், இசை, நாடக" எனப் பிரிந்து வளமடையச் செய்தனர்.

* எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.

மொழிக் கோட்பாடு:

* "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது" என்பார் முனைவர் எமினோ.

* ஒருமொழி 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர், ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.

செம்மொழி:

* சிறப்புமிக்க தமிழைச் "செம்மொழி" என அறிவித்தல் வேண்டும் என்ற  முயற்சி 1901 இல் தொடங்கி 2004 தொடர்ந்து.

* நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ளது.

துணைப்பாடம்: பரிதிமாகலைஞர்

பிறப்பு:
* சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.

* மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.

* பெற்றோர் = கோவிந்தசிவனார், இல்ட்சுமி அம்மாள்.

* தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் தேதி பிறந்தார்.

கல்வி:

* தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.

* மகாவித்துவான் சபபதியாரிடம் தமிழ் பயின்றார்.

* சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.

* இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இயற்றமிழ் மாணவர்:

* தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்தவுடன், அவர்களை "இயற்றிமிழ் மாணவர்" எனப் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைச் தமிழ்ச்சங்கம்:

* மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.

* பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

திராவிட சாஸ்திரி:

* யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, "திராவிட சாஸ்திரி" என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.

தனிப்பாசுரத்தொகை:

* பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய "தனிப்பாசுரத்தொகை" என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாரா.ண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ் பெயரைச் சூட்டிக்கொண்டார்.

* இந்நூலினை, ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கம்பராமாயண உவமை:

* பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்தபோது நடந்த நிகழ்வு.

* கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய "ஆர்தரின் இறுதி"என்னும் நூலில் இருந்து ஒரு பாடலில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.

* தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள"விடுநனி கடிது" என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.

தமிழ் சிறப்பை உணர்த்தல்:

* வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞர் கருத்து.

* தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் எனபதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

தமிழ்த்தொண்டு:

* பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

* ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.

படைப்புகள்:

* ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.

* அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.

* "சித்திரக்கவி" என்னும் நூலைப் படைத்தார்.

* குமரகுருபரரின் "நீதிநெறிவிளக்கம்" என்னும் நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இதழ்ப் பணி:

* மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த "ஞானபோதினி"  என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்.

* மும்மொழிப் புலமை உடையவர்.

* மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் "செந்தமிழ்" இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தனர்.

* தமிழ்மொழி "உயர்தனிச் செம்மொழி" என முதன்முதலாக நிலைநாட்டினார்.

மறைவு:

* தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் (02.11.1903) இயற்கை எய்தினார்.

* நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com