உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சுதந்திரப் போராட்டத்திற்கான விதை

மக்களை எழுப்புவதற்காக சுவாமிஜி அளித்த மகா மந்திரமும் உண்மை விளக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்கும் விதை ஆயிற்று.

News image
Updated On :9 ஜனவரி 2014, 5:38 pm IST

மக்களை எழுப்புவதற்காக சுவாமிஜி அளித்த மகா மந்திரமும் உண்மை விளக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்கும் விதை ஆயிற்று. நமது சுதந்திரப் போராட்டத்தில் பலவிதமான போக்குகளைக் கொண்ட மாமனிதர்கள் ஈடுபட்டார்கள். மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற மிதவாதிகள் பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் போன்ற மிதவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பிபின் சந்திர பால், அரவிந்தர் தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், பாரதியார், வ.வே.சு ஐயர் சுப்பிரமணிய சிவா, தென்னாட்டு சுபாஷ் என்ற போற்றப்பட்ட முத்துராமலிங்க தேவர் போன்றோர் இவர்கள் அனைவருக்கும் தூண்டுதலாக இருந்தவர் சுவாமிஜி என்பது அவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும். இனி, தீவிரவாதிகளும் கூட சுவாமிஜியின் கருத்துக்களை அச்சிட்டு வினியோகித்தார்கள்! இதனால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் ராமகிருஷ்ண மிஷனையே சந்தேகக் கண்ணுடன் பார்க்க நேர்ந்தது என்பது வேறு விஷயம்!

இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிலும் தாய்நாட்டுப்பற்றை ஊட்டி அவர்களைத் தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடத் தூண்டியவர் சுவாமிஜி.அதனால்தான் மகாத்மா காந்தி, 'விவேகானந்தர் இலக்கியத்தை நான் மிகவும் ஆழ்ந்து படித்துள்ளேள். அவருடைய படைப்புகளைப் படித்த பிறகு எனக்கு என்தாய்நாட்டின் மீதுள்ள பற்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது என்றார் ஜவஹர்லால்நேரு, விவேகானந்தர் சாதாரணமாக நாம் கொள்கின்ற பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் அவர் ஒருவர் என்பதில் ஐயமில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.