பணத்தினது ஒருபக்கம் உழைப்பு நேர்மை பளிச்சிடுமே மறு பக்கம் ஊழல் லஞ்சம்குணம் மாறும் பணம் வந்தால், பெருகும் குற்றம் குதூகலம்தான் நிறைந்தாளும், விலகும் சுற்றம்மணம்வீசும் பணம் போகும் கொள்ளை; நித்தம் மரணம்வந் தேவாழ்தல் அவரின் சித்தம்!கோணலாகும் செயல்தருமே கருப்புப் பணம், கோடிகோடி யாய்தினம் சேர்த்த பணம்!வாழ்வதற்கே பணம்தேவை ! பணமேதான் நல் வாழ்க்கையாக பதுக்கிவைப்பர் இடமே தேடிபாழ்மனதால் பணச்சுற்று முடங்கும் ஓடி பகட்டாக வாழ்ந்தபனம் உழைப்பிழந்துதாழிட்டு முடிக்கும் தன் வாழ்வை ! கைது தான்செய்வார் பெருந்தொகையை! கணக்கில் காட்டாவீழ்தொகையை கடன்ஈந்தே வட்டி சேர்ப்பார் ! வீழ்ச்சியுற்ற பங்குவாங்கி நட்டம் என்றே,தன் கணக்கில் வரவு வைப்பார் ! இழப்பார் தூக்கம் தன்பணத்தைக் காப்தற்கே வகுப்பார் திட்டம்முன்பணமாய் பலகோடி கொடுத்து வைப்பார் முடிந்தபோது தருவதற்கே வழிகள் சொல்வார்.நன்கறிவார் , தன்செயலால் பொருளாதாரம் நலிவுருதல்! வரிஏய்ப்பும் செய்வார்! என்றும் தன்நலத்தால் பிறர்நலத்தை மறுப்பார்! மறப்பார் !! தன்பக்கம் பணம்வரவே பிணமும் ஆவார் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.