பணத்தின் மறுபக்கம் பேராசைபரிவுடன் நடந்திட்டால் பெருங்கருணைகுணத்தைக் கலைக்குமொரு கூழாங்கல்கூற்றமாய் மாறிவிடும் இல்லையெனில்.பசிக்குப் புசிக்கமுடியாது சிலநேரத்தில்பகைக்கு ஆளாக்கும் பலநேரத்தில்கொடுக்கல் வாங்கலிலோ கெடுக்கும் உறவைகொல்லவைக்கும் கொடுமைகள் செய்யும்.பணத்தால் எதையும் வாங்கிட நினைக்கும்பதர்களாய் மனிதரை ஆக்கிடும் வளைக்கும்குணத்தைக் குப்பையாய்க் குறைத்து மதிப்பிடும்குரங்காய் மனதால் கொண்டு குதித்திடும்.நினைக்க முடியா செயல்களைச் செய்யும்நினைத்ததை முடித்திட நிம்மதி இழந்திடும்கணப்போதில் அதன் மதிப்பை இழந்திடும்கடவுளாய் ஆனது காலில் விழுந்திடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.