தேடித்தேடித் தொலைந்து போயினர்
என்னைக்கண்டு...!
தொலைத்தும் விட்டனர் நிம்மதிதரும்
சொந்தபந்தங்களை..!
குவித்துக்குவித்து குன்றாக்கி
மலைக்காமல் மலையுமாக்கினர்!
குப்பையும் கோபுரக்கலசமேறும்
கோபுரக்கலசத்துணியும் கீழிறங்கும்
என்றுணரா ஏய்த்தல் திலகங்கள்..!
மழைக்குக்கூட ஒதுங்கி தருமம்
செய்யா சுயஎண்ணக்கூட்டச்
சுனாமியில் மூழ்கிப்போனது மனிதங்கள்..!
தான் வெறும் வெற்றுக்காகிதமென
தன்னையுணர்ந்து உணர்த்திற்று
பணத்தின் மறுபக்கம் நமக்கு..!
உணர்ந்தும் உணரா உத்தமர்கள்
உணர்வாரோ மீண்டும்
நானொரு வெற்றுக்காகிதமென.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.