பணத்தின் மறுபக்கம் : ஆர்.அருண்குமார்

Updated on
1 min read

ஆசையால் அலைந்து திரிந்து
அம்பாரமாய் தேக்கி வைத்தீர்கள்.
ஓசையின்றி இருட்டறைக்குள்
ஒளித்துதான் வைத்தீர்கள்.

தேடியலைந்து நடந்து இன்று
தேம்பி அழ வைத்துவிட்டது.
வாடி வதங்கி விட்டோம்,
வாழ்க்கையையும் தொலைத்தோம்.

பீடுநடை போட்டவரெல்லாம்
பித்தாகி அலைவதுதானென்ன?
ஓடு கடைசி வரைக்கும் ஓடென
ஆட வைத்து அலைக்கழிப்பதேன்?

பணத்தின்அருமையை தெரியவைத்து
பண்பையும்,பக்குவத்தையும் தந்தது,
குணமொன்றுதான் வாழ்வென்ற
கொள்கைதான் இன்று வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com