பணத்தின் மறுபக்கம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
வீடுஊரை   மனைவிமக்கள்   எல்லாம்   விட்டு            விமானமேறி  வானத்தில்   பறந்து   சென்றுகாடுமலை   கடல்கடந்து   ஓடி   யோடிக்            கண்விழித்து   நாளெல்லாம்   உடலு   ழைத்துப்பாடுபட்ட  தெல்லாமே   வீணாய்ப்   போகப்            பணமாக  ஈட்டியதைப்   பதுக்கி   வைத்தார்கேடுகெட்ட   தன்னலத்தால்   வந்த  ஆசை            கெடுமதியால்   வெள்ளையெல்லாம்   கறுப்பா   யிற்று !தேள்கொட்ட   விழிக்கின்ற   திருடர்   போன்று            தெளிவாகப்    பிடிபடுவர்   எனநி   னைக்கத்தாள்களாக   இருந்தாலோ   செல்லா   தாக்கித்            தடியாலே   அடித்தரசு   பிடுங்கு   மென்றுதாள்களினைப்   பொன்னாக   மாற்றம்   செய்தும்            தரைதன்னைப்   பிறர்பெயரில்   வாங்கி   வைத்தும்ஆள்மாற்றித்   தேர்வெழுதி  ஏமாற்  றல்போல்            அரசுதனை   ஏமாற்றித்   திரிகின்   றார்கள் !பலரிங்கே   வெள்ளையாகப்   பயன்ப  டுத்தும்            பணந்தன்னைச்    சிலர்பதுக்கி    வைப்ப   தாலேவலம்வந்து    நாட்டைவளம்    செய்வ   தற்கு            வழியின்றித்   திட்டங்கள்    முடங்கிப்  போகும்நிலம்வாங்க   பொன்வாங்க   கட்டுப்   பாட்டை            நிலையாகச்   சட்டமாக்கிக்   கண்கா   ணித்தால்புலம்பெயர்ந்து   மறுபக்கம்   போயி   டாமல்            புலம்நின்று   நாடுததை    உயரச்   செய்யும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com