அழுத கண்ணீர் : சியாமளா ராஜசேகர் 

Updated on
1 min read

அழுத கண்ணீர் ஆற்றலையே 
****அன்பு நெஞ்சைத் தேற்றலையே !
பழுது மென்ன புரியலையே 
****பனித்த விழியும் காயலையே !

விழுது போல இருந்தவரின் 
****விதியும் முடிந்தே போனதுவோ ?
முழுதாய் மண்ணுள் புதைத்துவிட்டு 
****முரணால் தவித்துத் துடிக்கின்றோம் !

பிறந்த போதே எழுதிவைத்த 
****பிரியும் நாளே கசப்பாகும்  !
இறந்த பின்னும் அறமொன்றே 
****இறுதி வழிக்கும் துணையாகும்  !

உறவே என்றும் நற்துணையாய் 
****உரிமை யோடே கூடவரும்  !
மறலி முன்னே வந்தாலும் 
****வலுவாய் விரட்ட முனைந்துநிற்கும் !

இனியும் யாரை நம்புவதோ 
****இதயக் கனியே நீசொல்வாய் !
தனித்து நின்றே சாதித்த 
****தகைமை வருமோ யாருக்கும் !
கனிந்த உன்றன் அன்புமனம் 
****கனவாய்ப் போன தேயின்று !
புனிதம் காத்துப் பெருமைதனைப்
****பூக்கச் செய்ய யார்வருவார் ....???

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com