வேலி தாண்டிய காற்று: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

வரைமுறையை மீறி தரை நோக்கி சுழன்று வந்த
வேலி தாண்டிய காற்று

தமிழக தலை நகரமென்ன
தோசை சுடுகின்ற கல்லா
வர்தா புயலே சொல்வாயா

தோசையை  புறட்டி புறட்டி
போட்டு சுடுவது போன்று ஆசைப்படி விளையாடிட

வேலி தாண்டிய காற்றுவே
நீயென்ன சிவன் சந்ததியோ 
ருத்ரதாண்டவம் ஆடினாயே

வீதியிலும் வீட்டிலும் எரியும் விளக்கையேன்
அனைத்து இருள் ஆக்கினாய் ஞாயமோ

கோடையில்  சாலை நிழல் தரும் குடையாம்
மரங்களை வேரோடு தரை சாய்த்தாய் 

சேதம் ஒன்றோ இரண்டோ
எண்ணம் பலிக்கவில்லை
வலுவிழந்து மறைந்தாய்

தூங்கி கிடந்தோரெல்லாம் விழித்துக்
கொண்டுவிட்டார் போவாயா தலை நாணியே

உனக்கு யார் சிவப்பு ரோசா
என்றே பெயர் சூட்டினார்
தகுந்த பக்குவம் இல்லை" வேலி தாண்டிய காற்று 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com