வரைமுறையை மீறி தரை நோக்கி சுழன்று வந்த
வேலி தாண்டிய காற்று
தமிழக தலை நகரமென்ன
தோசை சுடுகின்ற கல்லா
வர்தா புயலே சொல்வாயா
தோசையை புறட்டி புறட்டி
போட்டு சுடுவது போன்று ஆசைப்படி விளையாடிட
வேலி தாண்டிய காற்றுவே
நீயென்ன சிவன் சந்ததியோ
ருத்ரதாண்டவம் ஆடினாயே
வீதியிலும் வீட்டிலும் எரியும் விளக்கையேன்
அனைத்து இருள் ஆக்கினாய் ஞாயமோ
கோடையில் சாலை நிழல் தரும் குடையாம்
மரங்களை வேரோடு தரை சாய்த்தாய்
சேதம் ஒன்றோ இரண்டோ
எண்ணம் பலிக்கவில்லை
வலுவிழந்து மறைந்தாய்
தூங்கி கிடந்தோரெல்லாம் விழித்துக்
கொண்டுவிட்டார் போவாயா தலை நாணியே
உனக்கு யார் சிவப்பு ரோசா
என்றே பெயர் சூட்டினார்
தகுந்த பக்குவம் இல்லை" வேலி தாண்டிய காற்று
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.