வேலி தாண்டிய காற்று " ரீகன் ஜெய்குமார்

Updated on
1 min read

போதை உண்ட காற்று 
அது புயலாக மாறியதோ

இல்லை மதம் பிடித்த காற்றுக்கு 
மறு பெயர்தான் புயலோ

மரம் செடி கொடியை ஆடவிட்டு 
தன்நிலை மறந்து ஆடியதே

பாலைவண புயலுக்கு 
புழுதி தான் புல் வெளியோ

வல்லோரும் புல்லோரும் 
வாய்க்கு வந்தபடி வசைபாடி செல்கின்றனரே

கிறுக்கு பிடித்த காற்று அது 
கிறுக்கி கிறுக்கி அடிக்கிறதே

தடுத்து நிறுத்த யார் இருக்கா 
தானாக ஓய்தால் ஒழிய 
வேர் அறுந்த மரங்களுக்கு 
வைத்தியம் யார் பார்திடுவார்

தேன் அருந்தும் தேனிக்கு 
பூக்கள்தான் யார் கொடுப்பார்

இழப்பக்கள் ஈடு செய்ய 
ஈரெழு ஆண்டு வேண்டும்

படைத்தவனின் செயல்களினை 
குறை சொல்ல நானில்லை

கெட்டவருக்கு வரும் துன்பத்தில் 
நல்லவர்க்கும் பங்குண்டாம்

நண்மையை ஏவி தீமையை 
தடுப்போம் 
தண்மையை கொண்டு 
தரணியை வளர்ப்போம்

புயலையும் கொண்டு 
பூப்பரிக்க புது யுகம் 
நாம் செய்திடுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com