போதை உண்ட காற்று
அது புயலாக மாறியதோ
இல்லை மதம் பிடித்த காற்றுக்கு
மறு பெயர்தான் புயலோ
மரம் செடி கொடியை ஆடவிட்டு
தன்நிலை மறந்து ஆடியதே
பாலைவண புயலுக்கு
புழுதி தான் புல் வெளியோ
வல்லோரும் புல்லோரும்
வாய்க்கு வந்தபடி வசைபாடி செல்கின்றனரே
கிறுக்கு பிடித்த காற்று அது
கிறுக்கி கிறுக்கி அடிக்கிறதே
தடுத்து நிறுத்த யார் இருக்கா
தானாக ஓய்தால் ஒழிய
வேர் அறுந்த மரங்களுக்கு
வைத்தியம் யார் பார்திடுவார்
தேன் அருந்தும் தேனிக்கு
பூக்கள்தான் யார் கொடுப்பார்
இழப்பக்கள் ஈடு செய்ய
ஈரெழு ஆண்டு வேண்டும்
படைத்தவனின் செயல்களினை
குறை சொல்ல நானில்லை
கெட்டவருக்கு வரும் துன்பத்தில்
நல்லவர்க்கும் பங்குண்டாம்
நண்மையை ஏவி தீமையை
தடுப்போம்
தண்மையை கொண்டு
தரணியை வளர்ப்போம்
புயலையும் கொண்டு
பூப்பரிக்க புது யுகம்
நாம் செய்திடுவோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.