ஆழி சூழ் உலகமெல்லாம் அழிய
ஆழிபேரலை ஆபத்தை அளிக்கும்
அதன் அடிச் சுவடு ஆற்றொனா துன்பத்தால்
அழிவை தந்து அவனியில் என்றும்
மாறாத நினைவைஇ பெரிதும் ஏற்படுத்தி
தேராத நிலையை நெஞ்சில் நிறுத்தி
விடியாத பொழுதை வாழ்வில் தந்து
வாழ்வோஒம எனும் நிலையை ஐயப்படுத்தும்
உலகத்து உயிர்கள் எல்லாம் இனிமேல்
உறவை காண்போமா என்றே தினமும்
உருகுலைந்து உள்ளத்தால் துயர் கொண்டு
வாழ இனிமேல் வழி உண்டா என்றே
வானத்தை அன்னாந்து பார்த்தவாறு
இறைவனை தினமும் நொந்து நொந்து
இயல்பான வாழ்வில் இன்பம் என்று
இயங்கிடூம் என்றே ஏங்கிடூம் நிலை காணும்
சுனாமியின் சுவடு ஒரு சுவர் ஓவியமா
மறந்தும் இந்நிலை மறுபடியும் காணாமல்
மாயோன் நம்மைக் காப்பதே மாணபன்றோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.