சுனாமி சுவடுகள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
கடற்கோள்கள்   வந்ததென்று   சங்க   நூல்கள்            கழறுவதை    நேற்றுவரைப்   பார்க்க   வில்லைஇடங்களாக  மிளிர்ந்தஊர்கள்   கடலுக்  குள்ளே            இருந்தயிடம்   தெரியாமல்   மறைந்த   தென்றார்நடமாட   தமிழ்வளர்த்த   சங்கம்   மூன்றும்            நறுநூல்கள்   எல்லாமும்   போன   தென்றார்படமாகக்   காட்டிட்ட    பாடற்   காட்சி            பார்ப்பதற்குக்   கண்முன்னே    வந்த  தின்று !ஆழிப்பே   ரலைதன்னைச்   சுனாமி   யென்றே            அழைத்தார்கள்   சென்னையினைத்   தாக்கும்   போதுஊழிப்பேர்    கூத்தாக    வேளாங்   கண்ணி            உயரெழுந்தே    நாகையினை   கடலூர்   தன்னைவாழிடமாய்   இருந்தகடற்   கரையின்   ஊரை            வாய்க்கரிசி   போட்டதுபோல்    எடுத்துக்   கொண்டுபாழிடமாய்  செய்ததுவே   முதியோ   ரோடு            பசுங்குழவி  உயிர்களையும்  விழுங்கி   விட்டு !பருவமழை   எனமுன்பு   பெய்த   போது            படர்ந்தஏரி   குளங்களினை   நிரப்பி  விட்டுஅரும்விளைச்சல்   தந்ததெல்லாம்    மாறிப்   போக            ஆர்க்கின்ற   காற்றோடு   மழையும்   சேர்ந்துபெரும்புயலாய்   கடல்கடந்து   நகரைச்   சூழ்ந்து            பேரழிவைத்   தந்ததந்த   சுனாமி   போன்றே !வரும்நாளில்   இச்சுவடு    பதியா   வாறு            வளரறிவால்   திட்டங்கள்   வகுப்போம்  நன்றாய் !ஓலங்கள்   ஒப்பாரி !  வீடு   வாசல்            ஒன்றிருந்த   உறவெல்லாம்   அழிந்து   போககாலங்கள்   துயர்சுவட்டை   மாற்று  மென்று            கடமையினைச்   செயும்போது   மீண்டும்  மீண்டும்கோலத்தை   மாற்றுதற்கே   புயல்கள்   வீசி            கொடுமைகளை  விதைக்கிறது   சுனாமி   போன்றேஏலமாக   வாழ்க்கையிங்கே    போகு  முன்பே            ஏற்றதொரு   திட்டத்தை    வகுப்போம்   நன்றாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com