கடற்கோள்கள் வந்ததென்று சங்க நூல்கள் கழறுவதை நேற்றுவரைப் பார்க்க வில்லைஇடங்களாக மிளிர்ந்தஊர்கள் கடலுக் குள்ளே இருந்தயிடம் தெரியாமல் மறைந்த தென்றார்நடமாட தமிழ்வளர்த்த சங்கம் மூன்றும் நறுநூல்கள் எல்லாமும் போன தென்றார்படமாகக் காட்டிட்ட பாடற் காட்சி பார்ப்பதற்குக் கண்முன்னே வந்த தின்று !ஆழிப்பே ரலைதன்னைச் சுனாமி யென்றே அழைத்தார்கள் சென்னையினைத் தாக்கும் போதுஊழிப்பேர் கூத்தாக வேளாங் கண்ணி உயரெழுந்தே நாகையினை கடலூர் தன்னைவாழிடமாய் இருந்தகடற் கரையின் ஊரை வாய்க்கரிசி போட்டதுபோல் எடுத்துக் கொண்டுபாழிடமாய் செய்ததுவே முதியோ ரோடு பசுங்குழவி உயிர்களையும் விழுங்கி விட்டு !பருவமழை எனமுன்பு பெய்த போது படர்ந்தஏரி குளங்களினை நிரப்பி விட்டுஅரும்விளைச்சல் தந்ததெல்லாம் மாறிப் போக ஆர்க்கின்ற காற்றோடு மழையும் சேர்ந்துபெரும்புயலாய் கடல்கடந்து நகரைச் சூழ்ந்து பேரழிவைத் தந்ததந்த சுனாமி போன்றே !வரும்நாளில் இச்சுவடு பதியா வாறு வளரறிவால் திட்டங்கள் வகுப்போம் நன்றாய் !ஓலங்கள் ஒப்பாரி ! வீடு வாசல் ஒன்றிருந்த உறவெல்லாம் அழிந்து போககாலங்கள் துயர்சுவட்டை மாற்று மென்று கடமையினைச் செயும்போது மீண்டும் மீண்டும்கோலத்தை மாற்றுதற்கே புயல்கள் வீசி கொடுமைகளை விதைக்கிறது சுனாமி போன்றேஏலமாக வாழ்க்கையிங்கே போகு முன்பே ஏற்றதொரு திட்டத்தை வகுப்போம் நன்றாய் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.