சுனாமியின் சுவடுகள் : பரந்தூர் ராமசாமி

Updated on
1 min read

உலகத்து நாடெல்லாம் பெருமை கொள்ளும்
உயர்வான நட்புதனை நாம் வளர்த்தால்
பலர் வாழ்த்தி புகழ்ந்துரைக்க உலகத் தோடு
போற்றுகின்ற நல்வழியே நடந்து வந்தால்
நிலநடுக்கம் சுனாமிதனை தாமறிந்து
நிலையறிந்து தற்காப்பு செய்ய்து கொண்டால்
மலருகின்ற வாழ்க்கையிலே துயரமுண்டோ
மகிழ்ச்சியது வாழ்நாளில் குறைவதுண்டோ

எதிர்காலம் என்னென்ன நடக்குமென்று
எல்லாமும் அறிந்திடுவார் அறிவில் வல்லார்
கதிகலங்க கதறுவைத்த சுனாமி யென்னும்
கொடும் அரக்கன் தீச்சுவடால் வானை எட்டும் 
புதிய அலை பேராழி சீற்றத்தாலே 
பிள்ளையோடு மக்களெல்லாம் இந்த மண்ணில்
பத்ஹியிஅமிட்டு வைத்தாற்போல் வரிசையாக 
பிணமாகப் போனாரே கொடுமையன்றோ

அழிவுதரும் சுனாமிதனை துணிந்து வெல்ல 
அறிந்ததனை தடுட்த்து நிற்கும் செயலைச் செய்வோம்
விழிமூடிக் கிடப்பதாலே வெளிச்சம் உண்டோ
விதியென்று விட்டுவிட்டால் வாழ்க்கை யுண்டோ
பழிதனை பிறர் மீது சொல்லிக் கொண்டு 
பரிதவித்து நிற்பதிலே பயனும் ஏது..?
அழியாத வரலாறு படைக்க வல்ல
ஆற்றலினால் புது உலகம் மலரவைப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com