இழப்புகள் தரும் வலி: பா.இராதாகிருஷ்ணன்

Published on
Updated on
1 min read

சங்கிலியாய் மனித உறவுகள்

பங்கமாய் அதன் இழப்புகள்

அன்பு  உறவுகள் அதிகமானால்

இன்பமாய் பாச வலைகள்

அன்பு வலைகள்  அறுந்தால்

ஆயிரமாயிரம் துன்ப சுமைகள்

இறந்தவரும் வலியை சொல்ல மறந்து விட்டார்

இழந்தவரை எண்ணி நாளும் மாளுகின்றோம்

இழப்புகள் தரும் மன வலி – அது

நெஞ்சில் ஆறா ரண வலி

நிஜமாய்  இருந்து வந்தவர்கள்

நினைவாய் போவது பெருவலி

நித்தம் அவர்தம் நினைப்பு

நீங்கா என்றும் பெரும் வலி

இழப்பு தரும் வலியை மறக்க

மாத்திரை ஏதும் இல்லையே

அடித்த வலி மறைந்தவிடும்

இழப்பு வலி நெஞ்சை கொல்லும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com