புதையல்:  பொன். குமார்

Updated on
1 min read

புதையல் தேடியே
கழிந்து கொண்டுள்ளது
மனிதர்கள் வாழ்க்கை.

தேடுபவர் அனைவருக்கும்
தென்படுவதில்லை 
புதையல்.

காலடியில் கிடந்தாலும்
கண்ணில் படுவதில்லை
சிலருக்கு புதையல்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
புதையலுக்காக 
அலைபவரும் உண்டு.

தேடுபவர் எல்லோருக்குமே
கிடைத்தும் விடுவதில்லை
புதையல்.

புதைத்து வைத்தவர்கள்
மரணித்து போனதால்
புதையுண்டே கிடக்கின்றது
புதையல்.

இயற்கையாக மண்ணுக்குள்ளும்
மறைந்து கிடக்கின்றன
பற்பல புதையல்.

மண்ணுக்கு மேலேயும்
மனிதர்கள் அறியாமல்
பரவிக் கிடக்கிறது
புதையல்.

தேடினால் 
எல்லோருக்குமே கிடைக்கும்
அழிவில்லா
அளவற்ற
அன்புப் புதையல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com