கோடி கோடியாகப் பணம் சேர்த்து,
கேட்டவர்க்குக் கொடுக்காமல்,
சேர்த்து வைத்து பூதம் காத்த புதையல்
போல் காத்ததனால் என்ன பயன் ?
காசிருந்தும் மதிப்பிழந்ததுதான்
கண்ட பயன்.
காசு பணம் புதையல் என்று
யார் சொன்னது?
பெற்றோர், உற்றோர்,பெரியோர்
கல்வி கற்பித்த ஆசான் ஆகியோரை
மதிக்கும் பிள்ளைகளே என்றும் அழியாத
புதையல் போன்றவர்கள்.
செல்வம் என்றாவது ஒருநாள்
செல்லாமல் போகலாம்.
அதனால் நட்டமொன்றுமில்லை.
நற்குணங்கள் இல்லாத பிள்ளைகள்
என்றுமே செல்லாத காசு போன்றவர்கள்.
புதையலை விடப் பெரிதாகப் போற்றி
நன்மக்களாய் நம் மக்களை மாற்றுவதால்
நட்டம் என்றுமே நமக்கு வாராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.