புதையல்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
உழைப்பதற்குப்  பெரும்சக்தி   புதைய   லாக            உடலுக்குள்   இருப்பதினை   அறிந்தி  ருந்தும்பிழைப்பதற்குப்   பிறர்பொருளைத்   திருடு   கின்ற            பிழைதன்னைச்   செய்கின்ற   கயவர்   ரெல்லாம்தழைத்திங்கே   உயர்வதினைத்   தடுத்தி   டாமல்            தலைவணங்கி   அவர்க்கடிமை   செய்ய   லாமாஅழைப்பிங்கே   யார்தருவார்    ஒன்று   சேர்ந்தே            அடித்தவரை   நாளெல்லாம்   உழைக்க   வைப்போம் !அன்பென்னும்   புதையலினை   அகத்துள்   வைத்தும்            அழகென்னும்   புதையலினை   அங்கம்   வைத்தும்புன்னகையாம்   புதையலினை   உதட்டுள்   வைத்தும்            பூத்தமலர்   பெண்மையினை   மணப்ப  தற்குக்கன்னலினைத்  தின்னகூலி   கேட்கும்   ஆண்மைக்            கயவர்க்குத்   தலைவணங்கிக்   குனிய   லாமாதன்மானம்   யார்தருவார்   பெண்க   ளெல்லாம்            தழலாக   எழுந்தாலே    எல்லாம்   மாறும் !அருஞ்சங்க   நூல்களென்னும்   புதையல்   தன்னை            அழகாக   வீட்டிற்குள்   அடுக்கி   வைத்தேதெருவினிலே   எச்சிலிலை   நக்கு   தற்குத்            தெருநாய்போல்   பிறமொழிக்காய்   ஏங்க   லாமாகருவாகப்   பாண்பாடு  ஒழுக்கத்   தோடு           கலந்தொன்றாய்   அறிவியலும்    உள்ள  செம்மைபெருமைமிகு    தமிழ்மொழியைப்   போற்ற  சேர்ந்தே            பேரறிவைப்   பெற்றுநம்மின்   காலில்   நிற்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com